
ருஷ்யன் லெனினிஸ்ட் யங் கம்யூனிஸ்ட் லீக்கின் ஆறாவது காங்கிரசில் உரையாற்றியது।ஜூலை 12,1924 கம்யூனிசத்தை கட்டுவதற்கான நமது போராட்டத்தையும், நமது சொந்த வாழ்க்கையும், இணைப்பதற்கு நாம் நாம் முயற்சி செய்தாக வேண்டும்।நமது சொந்த வாழ்க்கையை கைவிட்டாக வேண்டும் என்று இதற்கு அர்த்தம் இல்லை।கம்யூனிசத்துக்கான கட்சி என்பது சாமியார்தனமானதல்ல। அத்தகைய தன்மைக்காக வாதாட வேண்டியதில்லை।ஒரு சமயம் ஒரு தொழிற்சாலையில்,தனது சக தொழிலாளர்கள் இடையே பேசிய ஒரு பெண்”உழைக்கும் பெண் தோழர்களே! நீங்கள் கட்சியில் சேர்ந்த உடனே உங்களது கணவனையும், குழந்தையையும்,கைவிட்டுவிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டாக வேண்டும்”என்று பேசியதை கேட்டேன்।இது விசயத்தை அணுகும் முறை இல்லை।இது கணவனையும், குழந்தைகளையும் புறக்கணிக்கிற விசயம் இல்லை।அதற்கு பதிலாக,கம்யூனிசத்துக்கான போராளிகளாக மாறுவதற்கு குழந்தைகளை பயிற்சியளிப்பதாகும்।இப்படி செய்கையில் கணவனும் கூட அப்படிப்பட்ட போராளியாக மாறுகிறார்।சமுதாயத்தின் வாழ்க்கையோடு தன்னுடைய வாழ்க்கையையும் ஒன்றாக கலப்பது எப்படி என்று ஓருவர் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது। இது மதத்தன்மையுள்ள இறுக்கமான கோட்பாடு அல்ல........................................